செவ்வாய், 30 ஜூலை, 2013

வடிவேலுவும் , நானும் ! - பகுதி - 1 .

வடிவேலுவும், நானும் !


( வடிவேலுவும் நானும் அடிக்கடி சந்திப்போம்!)



நான் :    “ என்னடா!   இங்கே கூட நீ  வந்துட்டியா!

‘ தும்ட்டி!”



வடிவேலு :  என்னா, வாத்தியாரே !   நீ  மனசு சரியில்லாமத்தான்  நீ  இங்கே வந்திருக்கேன்னு எனக்குத் தெரியும் ! நீ எங்கே போவியோ அங்கே எல்லாம் நானும் வருவேன், ஆ....ஆங்க் !


sநான் : ” நாராப்பாடை !   நீ ஒரு பெரிய பிபிஎஸ் ஸு ! ‘ இதயக்கமலம்’  பாட்டு பாடவந்துட்டே!நான் மனசு சரியீலை என்னா , நான் பொறந்த வீட்டை மறப்பேனா, தடி ராஸ்கல் ! “


aவடிவேலு :உன்னப் பத்தி எனக்குத் தெரியாதா, என்னா !   நன்றி மறவாதவன் நீ!  நான்கூட அப்படித்தான், நய்னா !  சரி, சரி , மனசை தெம்பு பண்ணிக்கோ ! உன் படைப்பை எத்தினி பேர் படிக்கிறாங்கோ தெரியுமா!


eநான் :  அட போடா !   யார்    படிச்சுட்டு மகிழுனுமோ அவங்க காணோமே ‘ மம்முட்டி’ தலையா !


வடிவேலு :” அட !   மண்ணை வெட்டுற தே  ‘ மம்டி’  ந்னு இங்கே சொல்வாங்கோ !   அது என்னா ய்யா   ‘ மம்மூட்டி? ‘


நான் :”  அதுவா !   நீ  நடிகர் மம்மூட்டி மாதிரி தலை முடி வெச்சிருக்கே !  அத்தான் ! (     =   ‘ அது தான்’ ! )  சரி, சரி, நான் இப்போ எதுக்கு இங்கே வந்தேன்னு உனக்குத் தெரியுமா? ‘


வடிவேலு :  சொல்லேன் வாத்தியாரே !  நீ ரொம்ப  ரீஜெண்டு !  விஷயம் இல்லாமே இங்கே வரமாட்டே ,  சர்த்தானா!’



நான் :சரிடா, கேப்மாரி !’

” டி  எம் எஸ்  அவர்களின்   ஒன்பது  நவரசப் பாடல்களைப் பற்றி நான் இங்கே எழுத வந்திருக்கேன் !  கேட்டுக்கோ !’







வடிவேலு :’ நீ  சொன்னா  நா  என்னா  சொல்லப்போறேன் !   ஆமா, தக்காளி ரசம், பருப்பு ரசம் , எலுமிச்சங்கா ரசம் --- இத்தே எல்லாம் நான் கேள்விப் பட்டிருக்கேன் .......... அத்தே   ஏன் கேக்குறே !
பாதரசம்  கூட கேள்விப்படிருக்கேன் -  நீ ‘ டிக்ரீ ‘ பாப்பியே, அதுலே இருக்குதுஇல்லே !

சரி!   அது என்னா ‘ நவரசம் ? “


நான் :’ மூதேவி !...................................!”



வடிவேலு :’ ஓ  ,  நவரசம் என்ன மூதேவியா !”



நான் :   ”  உன்ன தூக்கி  வெய்யிலிலே போட!

‘ நவரசம்’   என்னா  ஒன்பது வகை உணர்ச்சிகள் !

நீ ஒரு மரமண்டை !

சரி, நான் இப்போது ‘கிளினிக்’ போகணும் !

அடுத்த தடவை உன்கிட்டே  பேசுறேன் !”



வடிவேலு :’  சரி   , வாத்தியாரே !   எத்தையாவது மனசுலே போட்டுக்குனு   கவலைப் படாம போ, நய்னா!


“ எல்லாம் நல்லபடியாக நடக்கும்!”





எம்கேஆர்சாந்தாராம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக