செவ்வாய், 30 ஜூலை, 2013

டி எம் எஸ் அவர்களின் நவரசப் பாடல்கள் !

டி எம் எஸ் அவர்களின்

நவரசங்கள் !





Image




நடிப்புக்கு ஒரு திலகம் -

நவரசங்களுக்கு ஒரு திலகம் ----- நடிகர் திலகம் !



பாடல்களில் நவரசங்களைக் காட்டும்

திலகம் :


டி எம் எஸ் !




இதில் மாறுபட்ட கருத்து என்பது யாருக்கும்

இருக்காது !




எனக்கு மட்டும் அல்ல, தமிழை

அறிந்தவர் அனைவரின் வாழ்வில் அன்றாடம் படும்

அனுபவங்கள் - படிபினைகள் - கசப்புணர்ச்சிகள் -

அறிவுரைகள் - சோகங்கள் - மகிழ்ச்சி .......

இன்னும் பலவற்றிலும் .....நமக்கு டி எம் எஸ்

பாடல்களை நிவுகொள்ளும் வகைகளில் அவரின்

பாடல்கள் அமைந்திருக்கின்றன என்று சொன்னால் அது

மிகைய்யாகாது !





வேறு எந்த பாடகருக்கும் இந்த

மாதிரி

" நவரசங்கள் "

என்று பட்டியலிட்டு பாடல்களைத் தர , அந்த

பாடகரின் பாடல்கள் அமைந்துள்ளனா என்று

கேட்டால்.......இல்லை என்றே சொல்ல முடியும் !




இதோ, திரு. அனாமிகன், உங்களின் விருப்பம்

நிறைவேருகிறது !




Image



( எங்கள் வீட்டில் திரு அனாமிகன்,

அவரது துணைவியாருடன் ! )




நவரசங்கள் என்றால்

எவை ?


எனக்குத் தெரிந்த வரையில் நவரசங்கள் என்றால் :




1. மகிழ்ச்சி


2. சோகம்


3. வீரம்


4. காதல்


5. பயம்.


6. சிருங்காரம்


7. சாந்ந்தம்


8 . அருவருப்பு.


9. கோபம்


போன்றவைகளை சொல்லலாம்,

இவைகளில் சொற்கள் வேறு மாதிரியாக

எழுதி சொல்பவர்களும் உண்டு !



என்னைக் கேட்டால் :


இந்த உணர்ச்சிகளையும் தாண்டி மற்ற

பாவங்க்களையும் காட்டுப் பாடிய :

ஒப்பற்ற கலைஞன், நமது டி எம் எஸ் !





சொல்லப்போனால் டி எம் எஸ் அவர்களின் பாடல்களை

இந்த நவரசங்களில் மட்டும் அடக்க முடியுமா என்பது

சந்தேகமே !

எனவே பாசம் இன்னொரு

உணர்ச்சியையும் இத்துடன் இணைத்திருக்கின்றேன்.




இன்னொரு செய்தி :


என்னதான் டி எம் எஸ் பாடகளை இந்த :

நவரச பட்டியலில்

அடிக்கிவிட்டாலும், ஒவ்வொரு வகைக்கும் :

எந்த பாடலை சேர்க்கலாம் - எந்த பாடல்

மற்றவைகளில் சிறந்தவை


என்பதை தேர்ந்தெடுக்கும் முறையில் நமக்குள்

சண்டையே

வரலாம் !

அந்த அளவுக்கு நம்ம டி எம் எஸ் , ஆயிரக்கணக்கான

பாடல்களைப் பாடியுள்ளார் !




இங்கே, இந்த எளியோன், என்னால்

முடிந்த வரையில் நான் கேட்டும் வியந்தும்,

உணர்ந்தும் மகிழ்ந்தும் உள்ள சில நவரசப்பாடல்களை

உங்களுக்கு அளிக்கிறேன் !

குறைகள் இருப்பின் அருள் கூர்ந்து மன்னித்து

படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் !



மேலும் சில வகை உணர்ச்சிகளுக்கு இடையே

மெல்லிய வித்தியாசம்

இருக்கும், அதையும் நீங்கள் கவனித்து பின்னர்

அதற்கேப்ப பொருத்தமான பாடல் / பாடல்களைத்

தருவது உங்கள் பொருப்பு !



" என்னடா ! இப்படி நாம் செய்தால் டாக்டர் கடுப்பு

ஆகிவிடுவாரா ! "


என்று தயவு செய்து எண்ணாமல் நீங்களும்

கொடுக்கலாம் !

சரியா !

இப்போது.......





டி எம் எஸ் அவர்களின்

நவரசப்

பாடல்கள் !







மகிழ்ச்சி :




Image
Image



“ மகிழ்ச்சி “ இந்த உணர்ச்சியை உணர்த்தும்

டி எம் எஸ் அவர்களின் பாடல்கள் ஆயிரக்கணக்கில்

உண்டு.

அனைத்துப் பாடல்களும் நன்றாகவே இருக்கும்.

ஆனால் என்னைப் பொருத்தவரையில் , நான் இன்று

வரை ரசிக்கும் பாடல்களில் ஒன்று :


” உலகம் பிறந்தது எனக்காக!

ஓடும் நதிகளும் எனக்காக ! “



“ பாசம்” படத்தில் இடம் பெற்றுள்ள இந்த பாடல்

இன்னும் எத்தனை தலைமுறைகள் தோன்றினாலும்

அழியாததும், மறக்கமுடியாத பாடலும் ஆகும் !



சிறுவர் சீர்திருத்தப் பள்ளியை விட்டு வெளியே

வரும் எம்ஜிஆர், அந்த படத்தில் முதல் காட்சியில்

தோன்றுவார். எம் ஜி ஆர் கால்களைக் கண்டவுடன்

ரசிகர்களின் ‘விசில்’ சத்தம் பறக்கும் !

அதற்கேப்ப மெல்லிசை மன்னர்களின் இசையைக்

கேட்டவுடன் நமக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்!

வயலிஙளின் உற்சாக இசையைக் கொண்டு ஆரம்பிக்கும்

இந்த பாடல், பின்பு பாடல் முழுக்க அதே ‘டெம்போ’

உடன் இருப்பதும் மகிழ்ச்சியே !

கவிஞரின் எளிமையான வரிகள், படிப்பறியாதவருக்கும்

எளிதில் புரிந்துவிடும் சொற்கள் :

எடுத்துக்காட்டு :



” எல்லாம் எனக்குள் இருந்தாலும்

என்னை தனக்குள் வைத்திருக்கும்

அன்னை மனமே என் கோவில் ,

அவளே என்றும் என் தெய்வம் ! “



அன்னை யின் சிறப்பை

எளிமையாக சொல்வதற்கு இதைவிட எளிமையான

சொற்கள் ஏது !

அதுவும் டி எம் எஸ் வாயால் சொல்லும் போது!



இந்த வரிகளைப் படியுங்கள் :




” தவழும் நிலவாம் தங்கரதம்!

தாரகைகள் பூத்த மணிமகுடம் !

குயில்கள் பாடும் கலைக் கூடம் !

கொண்டது எனது அரசாங்கம் ! “





மேற்கண்ட வரிகள் நம்

‘சுக்ரவதனி. ஆர்க்’ க்கும்

பொருந்தும் அல்லவா !






டி எம் எஸ் குரல் வளத்தைப்

பற்றி , வாலி சமீபத்தில் ஒரு வார இதழில்

சொன்னது !




” எம் கே தியாகராபாகவதர்

இறந்தவுடன் , அவரது உடலை

அவர்கள் ......

தோண்டிய குழியிலேயா

புதைத்தார்கள் ?

இல்லையே !

டி எம் எஸ் அவர்களின்

தொண்டைக் குழியில்

அல்லவா புதைத்தார்கள் ! ? “



( இந்த பாடலை முதலில் சீர்காழியை வைத்து

பாடிய்தாகவும் பின்னர் அது சரிபட்டு வராமல்

போகவே டி எம் எஸ் ஐ வைத்து பாடவைத்தகாகவும்

ஒரு செய்தி உண்டு, உண்மையா ? )


http://music.cooltoad.com/music/song.php?id=438797





***********************







சாந்தம்




Image
Image



‘ அமைதிக்கு மறுபெயர் சாந்தம்!’

பாடலைக் கேட்டவுடன் உங்களின் மனது அமைதி

பெறவேண்டும் , ஆறுதன் அடையவேண்டும் ,

‘ மன நிம்மதியைத் தரும் ஒரு நல்ல பாடலைக்

கேட்டோம் !’

என்கிற ஆறுதலை அந்த பாடல் தரவேண்டும் !

என்ன பாடல் அது ?

டி எம் எஸ் இதுமாதிரியான ஆயிரக்கணக்கில் பாடல்

களைப் பாடியுள்ளார் !

அவரின் முருக பெருமானின் பக்திப்

பாடல்கள் அனைத்தும் இதே மாதிரியான

ரகம்தான் !


ஆனால் திரைப்படப் பாடல்களில் இந்த ரகத்தில்

எனக்கு மிகவும் பிடித்த பாடல் :




“ ஆறு மனமே ஆறு !

அந்த ஆண்டவன் கட்டளை ஆறு ! “



“ ஆண்டவன் கட்டளை “ படத்தில் இடம் பெற்ற இந்த

பாடலை....

டி எம் எஸ் நன்றாகவே பாடினார்,

கவிஞரும் நன்றாகவே பாடலை எழுதினார் !

மெல்லிசை மன்னர்களும் நன்றாகவே இசையமைத்

தார்கள் !

நடிகர் திலகம் என்ன செய்தார்?


இவர்களை எல்லோரையும் தூக்கி

சாப்பிட்டுவிட்டார் !


ஆமாம், இந்த பாடலைக் கேட்டாலே நடிகர் திலகத்தின்

அந்த :

” முற்றும் துணிந்தவர்களின் துறவிகளின்

‘சாந்தமான ‘ முகங்கள் நினைவுக்கு வருகிறதா

இல்லையா !

இந்த கேள்விக்கு பதில் சொல்வதில் குழப்பமே

இல்லை !






நான்கு முழ காவி வேட்டி,

‘ஷேவ்’ பண்னாத முகம்,

முகத்தில் ‘ அமைதி’ , ‘ வெறுமை ‘

அலட்சியமான, அவசரம் இல்லாத நடை !

பின்னாடி கோவில் கோபுரம் !

சும்மா ஒரு பொட்டலம் வேர் கடலை வாங்கி

அதனை கொறித்துக் கொண்டே நடக்கும் லாவகம்!

எல்லாமே அற்புதம் !



அதுவும் டி எம் எஸ் அவர்களின் குரல்!


அந்த காலத்தில் ஒரு சிறந்த பாடலை உருவாக்குவதற்கு

ஒரு போட்டியே இருந்தது !


அதற்கு இந்த பாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு !


http://www.mediafire.com/download/ql800 ... ANTHAM.mp3




***********************







காதல்:




Image
Image







நவரசத்தில் : ‘கருணை” யை நான் ‘காதல்’

என்று எடுத்துக்கொண்டு இந்த பாடலைத்

தருகிறேன் !


திரைப் படங்களில் ‘காதல்’ தானே மேலோங்கி

நிற்கிறது, அதனை சேர்க்காமல் இருந்தால் எப்படி !

டி எம் எஸ் அவர்களின் காதல் பாடல்கள் ஆயிரம்,

ஆயிரம் !

எதை குறிப்பிடுவது, சொல்லுங்கள் !

ஆனால், இந்த கட்டுரைக்காக நான் தேர்ந்தெடுத்த

பாடல் :


” எங்கெல்லாம் வளையோசை

கேட்கின்றதோ,

அங்கெல்லாம் என் ஆசை பறக்கின்றது !”


“ வெகுளிப் பெண்” படத்தில் இடம் பெற்ற பாடல்

இது !


வி குமார் இசை, ஆர் முத்துராமன் நடிப்பு ,

கறுப்பு வெள்ளை படம், சரியாக ஓடாதது.....


இப்போது புரிகிறதா, இந்த பாடல்

‘ஹிட்’ ஆகதற்கு காரணம் !

வேறு காரணங்கள் ஏதாவது உண்டா !

இல்லையே !



டி எம் எஸ் இந்த பாடலில் என்ன குறை வைத்தார்?

வி குமார் அவர்களும் என்ன குறை வைத்தார்?


இருந்தும் பாடல் ‘ஹிட்’ ஆகவில்லை !


இந்த மாதிரியான அருமையான பாடல்கள் ஹிட்

ஆகாமல் இருப்பது ஏராளம், ஏராளம் !



இந்த பாடலில் டி எம் எஸ் ‘ காதல் கொண்டவனின்

எண்னங்கள’ மிக அழகாக வெளிப்படுத்துவதாக

பாடுவது அற்புதம் !


முதல் பாராவில் :


[b]” சுகமான இசை பாடும் இள

மங்கையாளோ!

பதமாக நடமாடும் அவள் வண்ணத்தேரோ !”
[/b]


என்று பாடும் டி எம் எஸ் குரலில் தமிழ்

விளையாடுகிறது !


அதற்கு அப்புறம் அவர் கொடுக்கும் “ஹம்மிக்”

குரலும் இளமை , இனிமை !


டி எம் எஸ் அவர்களின் தமிழ்

உச்சரிப்பை கேளுங்கள் :





“ கரை போட முடியாத புது

வெள்ளை

ஆடை !




கலைமானும் அறியாத

விழி

வண்ண ஜாடை!





பார்வையில்

இளமை,



வார்த்தியில்

மழலை




கூந்தலும் வணங்கும் காலடி

நிழலை




” ல”

“ ள”

“ழ “



இவைகளின் உச்சரிப்பைப் பாருங்கள் !



மேற்கண்ட வண்ணமிட்ட சொற்களை எப்படி

அழகாக உச்சரிக்கிறார் என்பதை கேளுங்கள் !


அதுதான் டி எம் எஸ் !





’ வெகுளிப்பெண் “

இரண்டு உபரி செய்திகள் - சுவையுடன் !




இந்த படத்தை தயாரித்து இயக்கியவர் :

எஸ் எஸ் தேவதாஸ்.

இவர் என்னுடைய தாய் மொழியை பேசுபவர்.

இயக்குனர் ஏ பீம்சிங் இடம் வேலை செய்தவர்.



இல்லே...இப்படி சொன்னால் உங்களுக்கு உறைக்கும் :

நடிகை தேவிகா வின் கணவர்!

நடிகை கனகா வின் அப்பா !



இவர் சமீபத்தில் எங்கள் சமூக பத்திரிக்கையில்

ஓர் அறிக்கை கொடுத்தார்:

என்ன அறிக்கை தெரியுமா ?

” வெகுளிப் பெண் “ கள்ள

வீடியோவை யாராது வைத்திருந்தால் நான்

போலீஸில் புகார் கொடுப்பேன் !”/b]


இது எப்படி இருக்கு !


( திரு ஈஸ்வரி எனக்கு கொடுத்த கள்ள விடியோ

வை யாரும் அவரிடம் சொல்லிவிடவேண்டாம் ! )




[b][color=#FF0000]” எங்கெல்லாம் வளையோசை”


பாடலை படமாக வேண்டும்.

அது சாதாரணமான பாடலாக இருந்தாலும் டான்ஸ்

மாஸ்டர் வந்துதான் ‘ மூவ் மெண்ட்ஸ்’ கொடுத்து

படமாக்க வேண்டும் !

அந்த படத்தின் ‘டான்ஸ் மாஸ்டர்’ இந்த பாடலுக்கு

இவர் போகாமல் ....

தன் சிஷ்யப் பிள்ளை யை

ஷூட்டிங்க் செய்ய அனுப்பினார் !

அந்த சிஷ்யப் பிள்ளைக்கு செம கடுப்பு !


“ என்ன மாஸ்டர் ! இந்த பாட்டில் ‘டான்ஸ் “ யே

இல்லே ! இதுக்குப் போய் என்னை அனுப்புகிறீர்கள்!

முத்துராம சாரை எதை சொல்லி டான்ஸ் ஆட

வைக்கிறது ? “


என்று அலுத்துக்கொண்டே போனாராம் !




அந்த சிஷ்யப் பிள்ளையின் பெயர் :


கமல்ஹாசன்!


http://www.mediafire.com/download/866dh ... AATHAL.mp3




***************







Image












கோபம் :



Image
Image



" கோபம் " என்கிற உணர்ச்சிக்கு பாடல்கள் அமைவது

என்பது அசாதாரணம்.

ஆனால் டி எம் எஸ் அவர்களுக்கு, அது ஒன்றும்

அசாதாரணம் அல்ல, அத்துபடி !



கோபம் கொண்டு ( ! ) பாடும் பாடல்களை டி எம் எஸ்

நிறையவே பாடியுள்ளார் !



" நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா

சொல்லுங்கள் !"

" என் மகன் "


" யாரடா மனிதன் இங்கே கூட்டி வா அவனை இங்கே! "

" லட்சுமி கல்யாணம் "


போன்ற பாடல்களை சொல்லலாம்.


ஆனால் நான் இங்கே எழுத வந்தது,



" கண்ணா ! நீயும் நானுமா ! கண்ணா!

நீயும் நானுமா ! "

" கெளரவம்" படத்தில் இடம் பெற்ற பாடல்.



புகழ் பெற்ற அரசாங்க வக்கீல் ரஜினி காந்த், தனது

வளர்ப்பு மகனை வக்கீலுக்கு படிக்க வைக்கிறார்.

அவனோ ஒரு சந்தர்ப்பத்தில், தன் வளர்ப்பு தந்தைக்கு

எதிராக ஒரு வழக்கு விஷயத்தில் வாதாடவேண்டிய

நெருக்கடி !

எப்படி இருக்கும் , ரஜினிகாந்த் க்கு !



தன்னிடம் அன்பு காட்டிய ஒருவன்

தனக்கு எதிராக கிளம்பினால்.........




கோபம் வராமல் பின்னே

என்ன புண்ணாக்கா வரும் ?



( மேலே நான் எழுதியதைப் படிப்பவர்களுக்கு ஏதோ

நான் கோபத்தில் எழுதியதாக நினைக்க சாத்தியமுண்டு !

நான் பாரிஸ்டர் ரஜினிக்கு 'சப்போர்ட்' பண்ணி எழுதினேன்!

என்னிடம் அன்பு கொண்டவர்கள் திடீரென்று

புரியாத மாதிரி மாறினால்........

அவர்கள் மீது கோபம் கொள்ள

மாட்டேன் .......

மாறாக.....மனம் வருந்தூவேன்.....மனம்

புண்படும்....அவளவுதான் !






அந்த சமயத்தில் டி எம் எஸ்......இல்லே

சிவாஜி படத்தில் பாடும் பாட்டு !




இந்த பாட்டில் டி எம் எஸ் எப்படி 'கடுப்பாக பாடியிருக்கிறார்'

என்பதை பாருங்கள் !


" NEVER "


'NEVER ' என்று சொல்லும் இடத்தில் :


1. டி எம் எஸ் அந்த சொல்லில் கொடுக்கும் :

அழுத்தத்தில்

கோபம் தெரிகிறது அல்லவா !


2. அப்படி உணர்ச்சியைக் காட்டி பாடும்போது

நடிகர் திலகம் பாடுவது போல் இருக்க வேண்டும் !


இரண்டையும் கச்சிதமாக செய்து முடிக்கிறார்,

டி எம் எஸ் !




இந்த பாடல் ரிகார்டிங்க் சமயத்தில் டி எம் எஸ்

உணர்ச்சியுடன் பாடுகிறார்....

மெல்லிசை மன்னர் வேகமாக கைகளை ஆட்டி

இசை போடுகிறார் !

வாத்தியங்கள் ஆர்ப்பரிக்கின்றன !

வயலின் கள் இசை போடுகின்றன !

‘டிரம்ஸ்’ கள் அதிர்கின்றன !

இதற்கும்

இடையில் :




” சூபர்....

டி எம் எஸ் ! “





என்றது ஒரு குரல் !


யார் சொல்வது ?



ரிகார்டிங்க் ஐ பார்க்க

வந்து கண்களில் ஆனந்தக் கண்னீர் பொங்க

சொன்னவர்......


சிம்மக் குரலோன் சிவாஜி கணேசன் !




http://www.mediafire.com/download/k7mvk ... /KOPAM.mp3




************






பயம்




Image
Image







” ஒவ்வொருத்தனுக்கு

பயம் என்றாலே பேச்சே

வராது !

இதில் பாட்டு எங்கே வரும் ! “




சொன்னவர் : திரு. எஸ் கே ராஜா.!



சாருக்கு சொந்த அனுபவம் போலும் !

”எப்படி சொல்கிறீர்கள் ? “

என்கிறீர்களா !


இதோ திரு . எஸ் கே ராஜா சார் சொல்கிறார் :





In my house, a 'CAN' is getting ready for me! Voodu katti adippaanga!


( தமிழாக்கம் :


“ எங்க ஊட்லே ஒரு “ டப்பா” தயாராக

இருக்குப்பா!

வூடு கட்டி அடிப்பாங்க! :cool: )



viewtopic.php?f=184&t=18860&start=255


நான் சொன்னது சரிதானா, சொல்லுங்கள் !


வடிவேலு :


” யோவ், டாக்டரூ!

எங்க ராசாக்கண்ணு ( ! ) வை ரொம்பவே

ரேய்க்காதேப்பா ! அப்புறம் நா ‘கம்’னு

இருக்க மாட்டேன் !

அவரூ என் மேலே ‘பாசமலர்’ கண்க்கிலே பாசம்

வெச்சிருக்கார்! அத்தே நினைச்சா........

இப்போ எங் ‘கர்சீப்’ ஐ பிழிஞ்சா......

தண்ணி கொட்டுதுப்பா....கண்ணுத் தண்ணி! ஆங்!”



பயத்திலே பேச முடியாது !

கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாது !


பின் எப்படி பாட முடியும் ?


டி எம் எஸ் பாடுகிறார்!




” நதியினில் வெள்ளம்!

கரையினில் நெருப்பு !

இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு!

ஏன் இந்த சிரிப்பு ? “



“ தேனும் பாலும் “ படத்தில் இடம் பெற்றுள்ள

இந்த பாட்டில் டி எம் எஸ் :

பய உணர்ச்சியுடன்

பாடுகிறார் என்பது என்னுடைய தாழ்மையான

அபிப்பிராயம் !




ஒரு மனைவியைப் பெற்றவரே பயப்படும்

போது, இரண்டு மனைவிகள் என்றால் நிச்சயம்

பயம் இருக்கும் அல்லவா !

‘எப்படி இந்த பாடல் பய உணர்ச்சியில் சேரும்?’

என்று நீங்கள் கேட்கலாம் !

டி எம் எஸ் அவர்களின் குரலைக் கேளுங்கள்.

அதிலும் இந்த வரிகளை அவர் உச்சரிக்கும்

விதத்தை கேளுங்கள் :

“ ஏன் இந்த சிரிப்பு ? “

இப்படி டி எம் எஸ் பாடும் போது அவர்

குரலில் பய உணர்ச்சி

தென்படவில்லை ?

அதன் பின்னர் வரும் மெல்லிசை மன்னரின்

’டிரம்பட்’ ஒலி

இன்னும் பய உணர்ச்சியைத் தரவில்லை ?

பாடல் முழுவதும் .........

டி எம் எஸ் குரலில் :

இந்த பக்கம் வெள்ளம், அந்த

பக்கம் நெருப்பு - இனி என்ன நடக்குமோ? “


என்கிற பயம் அவர் குரலில்

தோன்றுகிறது அல்லவா ?


பய உணர்ச்சி தென்படும் டி எம் எஸ்

அவர்களின் வேறு பாடல்கள் இருப்பின்

தெரிவிக்கவும்.




http://www.mediafire.com/download/o4wle ... /BAYAM.mp3





********************





Image







அருவருப்பு





Image
Image



இந்த ‘ அருவருப்பு ‘ என்கிற உணர்ச்சியை வெறும்

வார்த்தைகளால் சொல்லிவிடலாம்....


” கரப்பான் பூச்சி மேலே வந்து

உட்கார்ந்திடுச்சிப்பா.....சே....சே....! “


என்றால் அருவருப்புதானே !

ஆனால் அதனை - அந்த உணர்ச்சியை

எப்படி பாட்டில் கொண்டுவருவது ?



டி எம் எஸ் க்கு அதுவும் கைவந்த

கலைதான் !



இந்த அருவருப்பு என்கிற உணர்ச்சியை மற்ற

பாடகர்கள் பாடியிருக்கிறார்களா என்பது எனக்குத்

தெரியாது !



ஆனால் டி எம் எஸ்

பாடியிருக்கிறார் !





” நாணம் இல்லை உங்கள் கண்களுக்கு!

நாலும் இல்லை இந்த பெண்களுக்கு !

போகப் போக மிச்சம் இருப்பது போய்விடுமோ!

ஒ.ஓஹோ....ஹோ.......

ஆ...ஹா....ஹா ......அய்யஹோ ! “



“ அன்பு வழி “ படத்தில் இடம் பெற்ற இந்த பாடலை

அருவருப்பு லிஸ்ட் இல்

சேர்க்கலாம் !


எப்படி ?


” பருவத்தை காட்டும் போட்டியோ!

போட்டியில் ஆயிரம் பாட்டியோ ! “



18 - 20 வயது அழகிய பெண்கள் கலந்து

கொள்ளும் ‘அழகிப் போட்டியில் ‘ திடீரென்று

நடிகை செளகார் ஜானகி யும் கலந்து கொண்டால்..

நமக்கு என்ன ஏற்படும் ?

அருவருப்பு தானே !




இந்த பாடலில் டி எம் எஸ் அவர்களின் குரலைக்

கேளுங்கள் !

’ அன் சகிக்கபுள்”

தன்மை ஒலிக்கின்றது அல்லவா !


” போகப் போக மிச்சம் இருப்பது

போய்விடுமோ ?”


என்று பாடும்போது பயத்தை விட

‘அசிங்கம்’ அல்லது ‘அருவருப்பு’ உணர்ச்சிதானே

தோன்றுகிறது !


இது மட்டுமா!


“ஒ.ஓஹோ....ஹோ.......

ஆ...ஹா....ஹா ......அய்யஹோ !”


என்று டி எம் எஸ் புலம்புவது....

அருவருப்பின் உச்சக்கட்டம்

என்றும் சொல்லலாம் !



http://www.mediafire.com/?qhagz1fzxkk


***************







சோகம்




Image
Image



( 'பிராப்தம்’ படம் : நன்றி : திரு. வியார் )


பொதுவாக சோகப் பாடல்களைக் கேட்டாலே

நமக்கு பிடிக்காது !

அந்த மாதிரி பாடல்களைக் கேட்க நமக்கு :

MENTAL PREPARATION

பண்ணிக் கேட்கவேண்டும் !


” பெண்ணே ! உன் கதி இதுதானா!

உன் பெண்மை , ஆண்மைக்கு பலிதானா !”


என்று சி எஸ் ஜெயராமன்

பாடுவதை கேட்க , அதற்கான மன நிலையை நாம்

எற்படுத்திக்கொள்ளவேண்டும்!


ஆனால்.....


டி எம் எஸ் அவர்களின் சோகப் பாடல்

விஷயத்தில் அது தேவையே இல்லை !

எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம் !




” ஒரே பாடல் உன்னை அழைக்கும்”

எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம் !


நடந்து வந்த பாதையிலே நாலு வழி

பார்த்திருந்தேன்...நல்லது கெட்டது புரியவில்லை!

நல்லவர் எல்லாம் வாழ்வதில்லை !”


எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம் !



” முத்து நகையே உன்னை நான்

அறிவேன்!”



- எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம் !



” இதயம் இருக்கின்றதே தம்பி !

இதயம் இருக்கின்றதே - வாழும் மனிதருக்கும்

வாடிடும் ஏழைகளுக்கும் இதயம் இருக்கின்றதே,

தம்பி !”



- எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம் !




” பல்லாக்கு வாங்கப் போனேன்

ஊர்வலம் போக !”


- எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம் !


” காவலும் இல்லாமல் வேலியும்

இல்லாமல் தர்மம் கலங்குதம்மா!

பாதை புரியாமல் போக முடியாமல் என்

கால்கள் தயங்குதம்மா !”


- எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம் !



இப்படி பல நூறு பாடல்கள் !



ஆனால் இங்கே நான் குறிப்பிட நினைப்பது :


” தாலாட்டு பாடி தாயாக வேண்டும் !

தாளாத என் ஆசை சின்னன்ம்மா! - வெகு

நாளாக என் ஆசை சின்னம்மா !”



“ பிராப்தம்’ படத்தில் இடம் பெற்ற பாடலில்,

சிவாஜியின் , எஜமானானின் மகளாக வருகிறார்,

சாவித்திரி.

எஜமானனின் மகள் என்பதால்

மிகவும் அன்புடனும் பாசத்துடனும் பழகுவார், அந்த

படகோட்டியாக வரும் சிவாஜி.

சாவித்திரி மணம் புரிந்து புகுந்த வீட்டிற்கு போகும்

போது கூட மிகுந்த பாசத்துடன் : “ நேத்து பறிச்ச

ரோஜா’ என்று பாடி வழியனுப்புவார் !


அதே சாவித்திரி, விதவையாக தந்தையின் வீட்டுக்கு

திரும்பி வரும்போது துடியாய் துடித்து போய்விடுவார்

சிவாஜி !


இந்த சூழ்நிலையில் பாடும் இந்த பாடலில் சோகம்

நிரம்பி வழிந்தாலும் எத்தனை தடவைகள் கேட்டாலும்

அலுக்காத குரல், இசை ...எல்லாம் !


பாடல் முழுக்கு டி எம் எஸ் இன் குரலைக் கேளுங்கல்!

ஓர் இடத்தில் அவர் அழ ஆரம்பித்துள்ளார் !



” ஆறாது ஆறாது அழுதாலும் தீராது,

ஆனாலும் வழி என்ன , தாயே !

அறியாத பெண்ணல்ல கனவோடு உறவாடு,

சுமைதாங்கிக் கல்லாக நீயே !”



இந்த மாதிரி அழுதுகொண்டே , உணர்ச்சியுடன் பாட

இந்தியாவிலே யார் உண்டு - ஒருவரைத்

தவிர !

அவர் : முகமது ரபி !



இந்த அழுகையுடன் டி எம் எஸ் பாடுவது அந்த

பாடலின் சூழ்நிலைக்கு வலு

சேர்ப்பதாக அமைகிறதல்லவா !

அது மட்டுமா !

இதனை புரிந்து கொண்டதால்தான் மெல்லிசை

மன்னர் டி எம் எஸ் இன் குரலுடன் ,

நடிகையர் திலகம் சாவித்திரியின்

குரலில் : ” கண்ணா”

என்று சொல்லும் இடம் அற்புதம் !


இந்த “கண்ணா” என்று சாவித்திரி சொல்லும்

போது, டி எம் எஸ் மிகவும் உணர்ச்சி வசப்

பட்டு சாவித்திரியை பாராட்டினாராம் !

” நான் எத்தனை நன்றாகப் பாடினாலும்

நீங்கள் “ கண்ணா!” என்பதை அழகாக உச்சரித்து

பாட்டின் தன்மையை கூட்டிவிட்டீர்கள், அம்மா!”


என்று சாவித்திரியை பாராட்டினாராம் , டி எம் எஸ் !



( நான் கொடுத்த இந்த பாட்டில் சவித்திரியின் வசனம்

இடம் பெற வில்லை . வேறு யாராவது இந்த பாடலை

சாவித்திரியின் வசனத்துடன் தர இயலுமா ? )



இதே மாதிரி “ குலவிளக்கு” படத்திலும் “ மேகம் திரண்ட

நேரத்திலே தாகம் எடுக்க வில்லை “

என்கிற பாடலில் , அருமையாகப் பாடும் டி எம் எஸ்

குரலுடன் :

”நடிகை சரோஜா தேவியின் பயங்கர

இருமல் ஒலி, பாட்டின் சோகத்திற்கு வலு சேர்க்கும்!”



நடிகை சரோஜாதேவியையும் டி எம் எஸ் மனதாரப்

பாராட்டினாராம் !


http://www.mediafire.com/download/7bffx ... /SOGAM.mp3




******************




வீரம்



Image
Image



டி எம் எஸ் அவர்களின் மறு பெயரே வீரம் தானே!


இவர் வீரத்துடன் பாடிய பாடல்கள் பல நூறு

இருந்தாலும் , அனைவரும் ஒன்று சேர தெரிவு

செய்யும் பாடல் :

” அச்சம் என்பது மடமையடா!

அஞ்சாமை திராவிட உடமையடா ! “



“ மன்னாதி மன்னன்” படத்தில் இடம் பெற்ற இந்த

பாடல் வேகம் மிகுந்த பாடல் !


டி எம் எஸ் பாடலின் ஆரம்பத்திலேயே வேகுத்துடன்

விவேகத்துடன் , வீரத்துடன்

பாட ஆரம்பித்துவிடுவார் !


போதாக்குறைக்கு மெல்லிசை மன்னர்களில் குதிரை

களின் குளம்பொலி !

வயலின் களின் வேகமான வீச்சு !


போதாக்குறைக்கு கண்ணதாசனின் ஊக்கம் மிகு

வார்த்தைகள் !


தூங்கும் போது இந்த பாட்டைக் கேளுங்கள் !

தூக்கம் போய்விடும் !

மயிர்க்கூச்செரிடும் !

கோழையை தைரியசாலியாக ஆக்கிவிடும்

இந்த பாடல் !



” வாழ்ந்தவர் கோடி, மறைதவர்

கோடி....

மக்களின் மனதில் நிற்பவர் யார் “




நிச்சயம் டி எம் எஸ் தான்!



Image




http://www.mediafire.com/download/8lqoi ... /VERAM.mp3



***********************



சிருங்காரம் :

( அழகு )




Image
Image




1. ஒரு நடிகனுக்கு நடிப்பு அழகு !


2. ஒரு நடிகைக்கு உடல் வனப்பு அழகு !

( நடிகை நன்றாக நடித்தால் எவன் பார்க்கிறான்! )



3. ஒரு இசையமைப்பாளனுக்கு , அவனி இசை

அழகு !



4. ஒரு ஆசிரியருக்கு போதிப்பது அழகு !


5. ஒரு மருத்துவனுக்கு நல்ல மருத்துவம்

பார்த்தல் அழகு !


( நான் ‘கிளினிக்” இல் உட்கார்ந்து ‘பிராக்டிஸ்’

பன்ணும் அழகே அழகுதான் ! )




அது போல....





ஒரு பாடகனுக்கு நன்றாக

பாடுவதுதான்

அழகு !





டி எம் எஸ் இதில் என்ன

குறை வைத்தார் ? !



( சுரைய கோஷல் என்கிற பெண் பாடகி பார்க்க

அழகாக இருப்பார். பாடினால் ‘தமில்’ அழகாக

இருக்கும் ! )



” I Will Sing For You !

I Will Dance For You ! "



” மனிதருள் மாணிக்கம் “ படத்தில் இடம் பெற்ற

இந்த பாடலில் :

டி எம் எஸ் எத்தனை ரகங்களில்

பாடியுள்ளார் :

கர்நாடக,

மேற்கத்திய,

மலையாள்,

தெலுங்கு

என்று பல வகைகளில் பாடியுள்ளார் !


இது சிருங்காரம் தானே !





” பெண்ணே உன் கையில்

ராஜாங்கம் இருந்தால் எல்லோரும் ஆடணுமா!

ராஜாதி ராஜனும் ரவிக்கைக்கு பயந்து

பின் பாட்டு பாடணுமா ? “



இது என்ன ?


அந்த காலத்தில் இந்திரா காந்தி,

காமராஜ் ஐ ‘ ஆட்டிப் படைத்ததை ‘

கண்னதாசன் கண்டனம் தெரிவிக்கும் ஸ்டையில்!





*******************






பாசம் :




Image
Image




டி எம் எஸ் அவர்களுக்கும் பாசப் பாடல்களுக்கும்

நெருங்கிய தொடர்பு உள்ளது !

பல பாடல்கள் ! அனைத்தும் மிக புகழ் பெற்றவை!

அவைகளை இங்கே பட்டியலிட்டால் என்னத்

திட்டுவீர்கள் !

“ ஏன் யா ! இதெல்லாம் எங்களுக்க்த் தெரியாதா!”

என்று கூட சொல்வீர்கள் !


இதை மனதில் கொண்டுதான்

டி எம் எஸ் அவர்களின் ஒன்பது நவரசப்

பாடல்களுடன் “ பாசம் “ என்கிற

உணர்ச்சியை சேர்த்து விட்டேன் !





” இனிமேல் எனக்கென்ன கவலை- என்

இதயம் பார்ப்பது மகளை !

உறவே எனக்கு அவள் எல்லை !

இனி உலகம் வேறு எதுவும் இல்லை !”




“ மகளுக்காக” படத்தில் இடம் பெற்ற இந்த பாடல்

டி எம் எஸ் அவர்களின் :

“பாசமான பாடல்களில் “

எனக்கு பிடித்த பாடல் !




படத்தில் ஏ வி எம் ராஜன் பாசமுள்ள தந்தையாகவும்

அவரது மகள் ஆக ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா

வருவார்கள் !


சிறையில் இருக்கும் தந்தை, தன் மகளைப் பார்க்க

“பரோல்” இல் இருந்து வருகிறார் என்று நினைக்கிறேன் !

அப்போது இந்த பாடல் ஏ வி எம் ராஜன் தன்

மகளை நினைத்து பாடுவது போல் காட்சி !


இந்த பாடலில் டி எம் எஸ் பாடும் உணர்ச்சி மிக்க

வரிகளை ராஜன் மிகுந்த செறிந்த நடிப்போடு படமாக்கி

இருப்பதை நான் ரசித்தேன் !




ஒரு தந்தை, தன்

மகளை நினைத்து பாடும்

அற்புதமான வரிகளைக் கொண்ட

பாடல் !





நம் சுக்ரவதனியில் சுமார் 5 வருடங்களுக்கு முன்னர்

ஒரு சகோதரி உறுப்பினர்,


“ என் தந்தையின் நினைவாக எனக்கு யாராவது

இந்த பாடலை வழங்க முடியுமா ? “

என்று கேட்டிருந்தார்.


யாருமே இந்த பாடலை அவருக்கு

வழங்க வில்லை !


காரணம் ?


யாரிடமும் இந்த பாடல் இல்லை !



அந்த சகோதரி மறுபடியும் கடிதம்

போட்டு :


“ யாருமே, என் தந்தையை நினைவு படுத்தும்

பாடலைத் தரமுடியவில்லையா ? “


என்று மிகுந்த வருத்ததுடன் கேட்க ஆரம்பித்தார்!




எனக்கு மிகுந்த வருத்தமாக போய் விட்டது.

என்னிடம் பாட்டு இல்லையா ?

இல்லை......இருந்தது !

எப்படி இருந்தது தெரியுமா ?


ஆடியோ காஸ்ஸட் வடிவில்

இருந்தது !



அப்போது ”சுக்ரவதனி குடும்பம்”

இல்லை!



( ஏன் , இப்போதுகூடத்தான் :

”சுக்ரவதனி குடும்பம்”

இல்லை, கொடுமை ! )



எனவே நான் யாரிடம் ‘ஆடியோ காஸ்ஸட்’ ஐ

எம்பி 3

ஆக்குவது என்பது தெரியவில்லை !



ஆனாலும் அந்த சகோதரிக்கு உதவ

வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன்!

என்ன செய்வது ?



கீழ் கண்டவாறு செய்தேன்!



1. “ டேப் ரிகார்டரில் ‘ அந்த பாடல் அடங்கிய

‘காஸ்ஸட்’ ஐ சொருகினேன் !


2. அந்த பாட்டு தொடங்கும் போது, என் செல்பேசியில்

அந்த பாடலை பதிவு செய்தேன் !


3. செல்பேசியில் பதிவு செய்த பாடலை கேட்டேன்!

பாட்டு நன்றாகவே ‘ரிகார்ட்’ ஆகியிருந்தது ---

கூடவே கார் ‘ஹார்ன்’ ஒலியுடன்

கேட்க வேண்டியிருந்தது !




4. மறுபடியும் செல்பேசி !

போட்டேன் , கேட்டேன் !

கூடவே மின் விசிறி சுற்றும் ஒலி !

வாழ்க்கையை வெறுத்தேன் !



இரவு 12 மணி , ஊர் அடங்கும் நேரம்!


5. மறுபடியும் செல் பேசி !

பாடல் ஓகே !

கூடவே ரோட் நாய் குரைக்கும்

ஒலியுடன் !




6. கதவுகளை சாத்தினேன் ! மின் விசிறி ‘ஸ்விட்ச் ஆப்!”

செல் பேசி , கேட்டேன் - ஓகே !



7. செல் பேசியை கம்பூடரில் இணைத்தேன் , அதில்

பாட்டை இறக்கினேன் !



8. எம்பி 3 ஆக்கினேன் ! அந்த பாடலைக் அந்த

சகோதரிக்கு கொடுத்தேன் !


அந்த சகோதரி எனக்கு மிகுந்த மகிழ்வுடன் எனக்கு

நன்றி சொன்னார் !


இப்போது

நான் தரும் இந்த பாடல்

மேற்கண்ட முய்ற்சியால் உண்டானதுதான்!




இப்போதாவது இந்த பாடலை இன்னும் சிறந்த

முறையில் யாராவது தரமுடியுமா ?





கடைசியாக:




Residential Boading School இல்

படித்துக்கொண்டிருக்கும் என் மகளைப்

பிரிந்து இருக்கும் நான் அடிக்கடி

விரும்பிக் கேட்கும் பாடல் இது !




http://www.mediafire.com/download/ujcid ... PAASAM.mp3




எம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக